search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "தந்திரி கண்டரரு ராஜீவரு"

    சபரிமலையில் அசம்பாவிதத்தை தவிர்க்க வேண்டும் என்றால் தயவு செய்து இளம்பெண்கள் யாரும் சபரிமலைக்கு வர வேண்டாம் என்று தந்திரி கண்டரரு ராஜீவரு கேட்டுக் கொண்டுள்ளார். #SabarimalaTemple #TantriKandararuRajeevaru
    திருவனந்தபுரம்:

    சபரிமலை ஐயப்பன் கோவிலில் அனைத்து வயது பெண்களையும் அனுமதிக்க வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட்டு கடந்த செப்டம்பர் மாதம் 28-ந்தேதி உத்தரவு பிறப்பித்தது.

    சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்புக்கு ஐயப்ப பக்தர்கள், இந்து அமைப்புகள், காங்கிரஸ், பா.ஜனதா கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்தி வருகின்றன. இந்த பிரச்சினையில் சுமூக தீர்வு காண அனைத்து கட்சி கூட்டத்தை முதல்-மந்திரி பினராயி விஜயன் கூட்டினார்.

    இதில் கலந்து கொண்ட எதிர்கட்சியினர் சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பை மறுஆய்வு மனு விசாரணைக்கு வரும் ஜனவரி 22-ந்தேதி வரை ஒத்திவைக்க வற்புறுத்தினார்கள். ஆனால் அதை பினராயி விஜயன் ஏற்க மறுத்ததால் அந்த கூட்டம் தோல்வியில் முடிந்தது.
    இதே போல பந்தளம் மன்னர் குடும்பம் மற்றும் சபரிமலை தந்திரிகளுடன் பினராயி விஜயன் நடத்திய ஆலோசனை கூட்டத்திலும் உடன்பாடு ஏற்படவில்லை.

    இதற்கிடையில் சபரிமலை தந்திரி கண்டரரு ராஜீவரு இது பற்றி கூறும்போது, சபரிமலையில் அசம்பாவிதத்தை தவிர்க்க வேண்டும் என்றால் தயவு செய்து இளம்பெண்கள் யாரும் சபரிமலைக்கு வர வேண்டாம் என்று கேட்டுக் கொள்கிறேன் என்றார். #SabarimalaTemple #TantriKandararuRajeevaru 

    சபரிமலையில் பாரம்பரியமாக கடைபிடிக்கப்படும் நடைமுறையை மாற்றக்கூடாது என கண்டரரு ராஜீவரு தெரிவித்துள்ளார். #SabarimalaProtests #KandararuRajeevaru
    பத்தனம்திட்டா:

    சபரிமலை ஐயப்பன் கோவிலுக்குள் அனைத்து வயது பெண்களையும் அனுமதிக்கலாம் என உச்ச நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு கேரள மாநிலத்தில் கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்து அமைப்பினரும், ஐயப்ப பக்தர்களும் இந்த தீர்ப்பிற்கு எதிராக போராட்டம் நடத்தி வருகின்றனர்.

    இதுஒருபுறமிருக்க பலத்த பாதுகாப்புடன் நேற்று கோவில் நடை திறக்கப்பட்டது. ஆனால் கோவிலுக்கு வந்த பெண்களை போராட்டக்காரர்கள் தடுத்து நிறுத்தி தொடர்ந்து போராட்டம் நடத்தி வருவதால் இதுவரை எந்த பெண்ணும் கோவிலுக்கு செல்லவில்லை.

    போலீசார் உரிய பாதுகாப்பு கொடுப்போம் என்று கூறினாலும், கோவில் பாரம்பரிய நடைமுறைகளை மதிக்கும் பெண்கள் யாரும் கோவிலுக்கு வரவில்லை. சிலர் வந்தாலும், பின்னர் சூழ்நிலையை உணர்ந்து பின்வாங்கிவிடுகின்றனர்.



    இதுபற்றி சபரிமலை தந்திரி கண்டரரு ராஜீவரு கூறுகையில், சபரிமலையில் பாரம்பரியமாக கடைபிடிக்கப்படும் நடைமுறைகளை மாற்றக்கூடாது என கருத்து தெரிவித்தார்.

    ‘உச்ச நீதிமன்றம் பாரம்பரியத்தை கருத்தில் கொள்ளாமல் சட்டத்தைப் பற்றி மட்டுமே நினைக்கிறது. உச்ச நீதிமன்றம் வழங்கியிருக்கும் தீர்ப்பால் பெரும்பாலான மக்கள் நம்பிக்கை இழந்துள்ளனர். வன்முறையினால் எதையும் சாதிக்க முடியாது. சபரிமலை பகுதியில் பக்தர்கள் அல்லாதவர்கள் வன்முறையில் ஈடுபடுகிறார்கள். குறிப்பிட்ட அந்த வயது பெண்கள் தயவு செய்து சபரிமலை வருவதை தவிர்க்க வேண்டும். சபரிமலையை கலவர பூமியாக்க வேண்டாம்’ என்றும் அவர் கேட்டுக்கொண்டார். #SabarimalaProtests #KandararuRajeevaru
    ×